புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


   மாரடைப்பு என்பது வயதானவர்களுக்குத்தான் வரும் என்ற காலம் மாறி இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்குக் காரணம்
பணிச்சுமையினால்தான் இதயநோய்க்கு ஆளாகின்றனர் இளைஞர்கள் என்கின்றது சமீபத்திய ஆய்வு.



இது தொடர்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 23 சதவிகிதம் பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு உள்ள பணிச்சுமைதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


வீட்டைவிட்டு வெளியே போனால் ஆண்களுக்கு கவலைப்பட என்ன இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஆனால் பணிபுரியும் இடங்களில் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.


பள்ளியில் தொடங்கும் ஓட்டம் வளர்ந்து பெரியவர்களாகி வேலையில் சேர்ந்த பின்னரும் அவர்களுக்கு தொடர்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் இரவில் அதிகம் கண்விழிக்கின்றனர். அதிகாலையில் பிறர் விழிக்கிற நேரம் தூங்குவதும், கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் உடற்பயிற்சியே செய்யாமல் புது வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். இதுவே அவர்களின் உடல் நலனை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top