புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தோனேசியாவின் தெற்குக் கடலோரப் பகுதியில் இன்று அதிகாலை கடுமையான நில நடுக்கம்ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது. இத்தகவலை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
இந்நோனேசியாவின் வடமேற்கு நகரான சுமால்கி நகரில், உள்ளூர் நேரப்படி இன்றுஅதிகாலை 1.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது பூமிக்குக் கீழ் 155 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை. அதேவேளை இந்த நிலநடுக்கம் அவுஸ்ரேலியாவின் டார்வின் நகரிலும் உணரப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் நிலநடுக்கத்தை உணர்ந்த டார்வின் மக்கள் அச்சத்துடன் விழித்துக் கொண்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top