புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பீகார் மாநிலத்தில் விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பாட்னா மாவட்டத்தில் உள்ள சோட்டி கேவாய் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த குட்டு யாதவ், அன்னு
யாதவ், அர்ஜூன் யாதவ் ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தில் வயலுக்குச் சென்ற இளம்பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் அரிவா என்பவர் பலாத்காரம் செய்துள்ளார். குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
 
Top