மன்னார் - தலைமன்னார் கரசல் இரண்டாம் கட்டைச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் எட்டுப் பெண்களும் நான்கு ஆண்களும் அடங்குவர். இது தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக