புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் போது, வானிலேயே 4 வயது மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ஜுகு பள்ளியில் கடந்த 15ஆம் திகதி மதியம் நர்சரி வகுப்புகள் முடிந்ததும் 12 நர்சரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வான் புறப்பட்டது.

அந்தேரி பகுதியில் ஒவ்வொரு மாணவியாக இறக்கி விடப்பட்ட பின்பு கடைசியாக 4 வயது மாணவி மட்டும் தனியாக இருந்தாள்.

பள்ளி வானில் விலே பார்லே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்ராஜ்புத்(வயது 35) என்பவன் கண்டக்டராக இருந்தான். அவன் தனியாக இருந்த மாணவியை மிரட்டி வானின் கடைசி இருக்கைக்கு இழுத்து சென்று கற்பழித்துள்ளான்.

பிறகு அவன் அந்த மாணவியிடம் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி, வீட்டில் இறக்கி விட்டான். பயந்து போன மாணவி இதுபற்றி அன்று வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.

மறுநாள் பள்ளிக்கு பயந்த படி அந்த மாணவி வந்ததை கண்டு ஆசிரியை விசாரித்த போதுதான் கண்டக்டரின் காமவெறிச்செயல் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை பொலிசில் புகார் செய்தார். அந்தேரி பொலிசார் கண்டக்டர் ரமேஷை கைது செய்தனர்.

அவன் ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பள்ளி வான் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட அனுமதியை பொலிசார் நேற்று ரத்து செய்தனர்.

மேலும் பள்ளி வாகனங்களில் மாணவிக்கு உதவியாக பெண் உதவியாளர் யாரும் வரவில்லை என்பதால் அது குறித்தும் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top