புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குடிபோதையில் மாமியார் என்று கூட தெரியாமல் 60 வயது பெண்ணை அவரது மருமகன்களே கற்பழித்துள்ள கொடூரம்  மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள குவாரா கிராமத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் 60 வயது பெண் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவரது மருமகன்கள் சந்தோஷ் பசோத்(40) மற்றும் மஞ்சன் பசோத்(29) ஆகியோரால் குடிபோதையில் கற்பழிக்கப்பட்டார்.

இது குறித்து அந்த பெண் பொலிசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்போரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து பொலிசார் சந்தோஷ் மற்றும் மஞ்சனை கைது செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top