புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தின் புவியியல் துறையின் சார்பில் பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில், நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.

இதனால் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம் பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேலும் சில மூலகங்களுடன் இரசாயனமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பல மாற்றங்களுக்கு பின் நீரானது தங்கமாக மாறுகிறது. சாதாரணமாக இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.

ஆனால் நியூசிலாந்தில் நிலவும் சாதகமான தட்ப வெட்ப நிலையின் காரணமாக வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது.

சில நூறு ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top