புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாட­சாலை மாண­வ­னொ­ரு­வ­னையும் மாண­வி­யையும் கணவன் – மனை­வி­யாக இணைந்து வாழ்­வ­தற்கு ஆத­ரவு வழங்­கிய தந்­தை­யொ­ருரை எதிர்­வரும் 8 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி மாத்­தளை நீத­வான் நீதி­மன்ற நீதிவான் சத்­
து­ரிகா டி சில்வா உத்­த­ர­விட்டார்.

ரத்­தோட்ட பிர­தே­சத்தில் வயது குறைந்த சிறு­மி­யொ­ருத்­தியும் சிறு­வனும் கணவன் – மனை­வி­யாக குடும்பம் நடத்­து­வ­தாக கிடைத்த தக­வ­லொன்றை அடுத்து விசா­ரணை மேற்­கொண்ட ரத்­தோட்டை பொலிஸார், இந்த ஜோடியை முறை­யற்ற வகையில் சேர்ந்து குடும்பம் நடத்த ஆத­ரவு வழங்­கிய சிறு­மியின் தந்­தையை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­ போதே நீதிவான் இந்த உத்­த­ரவை பிறப்­பித்தார்.

மாணவன் பாட­சாலை செல்­லும்­ போது மாண­வி­யுடன் காதல் வயப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வ­ரு­கி­றது. மாண­வ­னையும் மாண­வி­யையும் இரட்­சண்­ய­சேனை பொறுப்பில் ஒப்­ப­டைக்­கும்­ப­டியும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top