இந்தியாவின், மராட்டிய மாநிலம் தானே லோக்மானிய நகரை சேர்ந்த ராஜேஷ் மதரியா என்பவரது மகளான 8 வயது சிறுமி, கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் திகதி அன்று இரவு
துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தீ வைத்து எரித்து கொல்லப்பட்டாள்.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 22 வயது சேகர் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த தானே கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி சயீது, குற்றவாளி சேகர் குப்தாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
திருமணமான சேகர் குப்தாவுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.