புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஹக்கீம் (வயது 34). இவரது மனைவி மும்தாஜ் (29). இந்த தம்பதியினருக்கு அப்துல்ரசீத் (6) என்ற ஒரு மகன் உள்ளான்.

இதற்கிடையே மும்தாஜ் மீண்டும் கர்ப்பிணி ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மும்தாஜ் கடந்த 9-ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

10-ந்தேதி ஆஸ்பத்திரியில் மும்தாஜிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் 'இன்குபேட்டர்' வார்டில் குழந்தை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. குழந்தையின் தாய் மும்தாஜ் 3-வது மாடியில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தாயார் பீபிஜான் மட்டும் குழந்தை அருகில் உட்கார்ந்து கவனித்து வந்தார்.

இதற்கிடையே நேற்று மாலை 3.30 மணிக்கு இன்குபேட்டரில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை தாய் சிகிச்சை பெறும் 3-வது மாடியில் உள்ள வார்டுக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தையை தாய் மும்தாஜ் கொஞ்சி மகிழ்ந்து கவனித்து வந்தார்.

மாலை 4 மணி அளவில் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் போல் வெள்ளை நிற சேலை ஊதா கலர் ஜாக்கெட் அணிந்த ஒரு பெண் அங்கு வந்தார். 'குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் கொண்டு வாருங்கள்' என்று கூறினார்.
 
Top