புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகை வீணா மாலிக் ‘ஜிந்தகி 50–50’ என்ற படத்தில் விபசார அழகியாக நடிக்கிறார்.



இந்த நிலையில் விபசார தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் ஒருநாள் பொழுதை கழிக்க நடிகை வீணா மாலிக் விரும்பினார்.
அதன்படி அவர் நேற்று ஆசியாவில் 2–வது மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதியான காமதிபுரா என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு வந்தார்.

அவருடன் நடிகர் ராஜன் வர்மாவும் வந்திருந்தார். நடிகை வீணா மாலிக் கவர்ச்சியான உடையை அணிந்து இருந்தார். அவரை விபசார அழகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்னர் நடிகை வீணா மாலிக் நிருபர்களிடம் கூறுகையில்…

‘‘காமதிபுராவை பார்வையிட்டு இங்குள்ள பெண்களுடன் பொழுதை போக்கியது சிறந்த அனுபவமாக கருதுகிறேன். நான் விபசார அழகியாக நடிக்கும் நிலையில், இங்கு வந்ததால் அந்த உண்மை வாழ்க்கையை உணர முடிந்தது.

செக்ஸ் தொழிலாளர்களை பாதுகாக்க நான் உதவுவேன். செக்ஸ் தொழிலாளர்களை தீண்ட தகாதவர்களாக ஒதுக்கி வைக்க கூடாது.

அவர்களுக்கு எனது மனதில் சிறப்பு இடம் உண்டு’’ என்றார்.

ஜந்தகி 50–50 படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கும் ராஜன் வர்மா கூறுகையில், ‘‘காமதிபுராவுக்கு வந்து நாங்கள் விழிப்புணர்வு செய்தது மிகுந்த மனமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.
 
Top