புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-ஆந்திர மாநிலத்தில் குளிர்பானம் அருந்திய தாய் மற்றும் மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் எதிர்பாராத விதமாக அந்த பெண் உயிரிழந்தார், அவரது மகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

ஆந்திர மாநிலம் மச்சிலிபட்டனதில் உள்ள ராஜபேட்டா பகுதியில் உள்ள வீட்டில், நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு ஷேய்க் முன்னி(35) மற்றும் அவரது மகள் சாந்தினி (13) ஆகியோர் குளிர்பானத்தை அருந்தியுள்ளனர்.

குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களிலேயே ஷேய்க் முன்னிக்கும், சாந்தினிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
Top