புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் குதித்த சம்பவம் இன்று (27) முற்பகல் 10.45 மணியளவில்
இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அவருடைய இரு பிள்ளைகளான இலக்சினி (வயது 07) மற்றும் மீனுஜா (வயது 03) ஆகிய இருவரும் பலியாகியுள்ளதுடன் தாய் உயிர் தப்பியுள்ளார்.

பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.

இச்சம்பவம் கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top