புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒடிசாவில், தனது 62 வயது மனைவியைக் கொன்று, 300 துண்டுகளாக வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஒடிசா மாநிலம் நயாப்பள்ளி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சோம்நாத்பரிதா (72). இவர் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் தனது மனைவியைக் கொலை செய்து, அவரது உடலை 300 துண்டுகளாக வெட்டி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்துள்ளனர். இந்த தம்பதியின் மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

கொலைக்கான காரணம் குறித்து சோம்நாத்பரிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top