புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கண்டி மாவட்டத்தின் பிலிமதலாவ, இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேகநபர் தனது காதலியை சந்திக்கும் பொருட்டு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இதனை அப் பெண்ணின் தந்தையார் காணவே இருவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்நபர் காதலியின் தந்தையின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.

இதில் காயமடைந்த அப்பெண்ணின் தந்தை 82 வயதானவரெனவும் அவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேக நபரையும் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top