புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்.தீவகமான நெடுந்தீவுப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று
வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நீண்ட நாளாக படைமுகாமில் இருக்கும் 19 வயது நிரம்பிய இராணுவ இளம் நங்கையை காதலித்து வந்துள்ளதாகவும், அந்த குறித்த இராணுவ நங்கை இன்னொரு இராணுவ சிப்பாயுடன் பாலியல் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக காதலனான இராணுவச் சிப்பாய்க்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரித்த போது குறிதத் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் அவ்வாறான தொடர்புகளைப் பேணவில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த விடயத்தை குறித்த சிப்பாய் விசாரிக்க தொடங்கினார்.

அதனால் தனது காதலி இன்னொரு இராணுவத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோக் காட்சியை கைத் தொலைபேசியில் படம் பிடிக்கப்பட்டு இருந்ததனை தனது சக சிப்பாய் மூலம் அறிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று இரவு படைமுகாமில் தன்னைத் தானே ரி 56 துப்பாய்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட இராணுவச் சிப்பாய் நுகொகொட பகுதியைச் சேந்த எஸ்.எம்.பி. பிஸந்த தர்சன (வயது 23) என்பவராவார்.

இராணுவச் சிப்பாயின் சடலம் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top