புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மோட்டார் சைக்கிளில் வந்தவர் வீதியில் குவிக்கப்பட்டிருந்த கிரவல் கற்கள் மீது தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவத்தில் சாவகச்சேரி சரசாலை மேற்கைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி (வயது 50) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

நேற்று மாலை 6 மணிக்கு மோட்டர் சைக்கிளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மதுபோதையுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

வீதித் திருத்தத்திற்காக போடப்பட்டிருந்த கற்குவியலுக்குள் தவறி விழுந்து காயமடைந்தார்.

படுகாயமடைந்த இவரை வீதியில் நின்றவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு அவர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை அடுத்து சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top