புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனடாவில் ஒண்டோரியாவிலுள்ள பீல் ரீஜியன்(Peel Region) என்ற பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது.


23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, உயிருக்கு ஆபத்தான காயங்களை உண்டாக்கிய பீல் ரீஜியன் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி Abel Gomes என்பவரை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யும்போது கூட அவர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்கார சம்பவம் டிசம்பர் மாதம் 2012ம் ஆண்டு 14ம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு நேற்று ஒண்டோரியோ நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், மீண்டும் யூன் மாதம் 24ம் திகதி ஆஜராகவேண்டும் என்ற உத்தரவாதத்துடன் இந்த பிணை அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளிற்கிணங்க பெண்ணின் பெயர் மற்றும் முகவரி வெளியிடப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top