புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் மிக அதிக வயதான பெண்மணி என்று கருதப்பட்டு சீனாவில் வாழ்ந்து வந்த 127 வயதான "லுவோ மெய்ழென்" என்ற மூதாட்டி மரணமடைந்தார்.

1885ம் ஆண்டு இவர் பிறந்ததற்கான ஆதாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் லுவோ மெய்ழென்னிற்கு 116 வயது தான் ஆகிறது.

சமீபத்தில் மரணமடைந்த ஜப்பான் மூதாட்டியின் மறைவுக்குப் பிறகு உலகின் மிக அதிக வயதான பெண்மணியாக லுவோ மெய்ழென் கருதப்பட்டார்.

இவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்து சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தில் மரணமடைந்தார்.

அரசாங்க ஆவணங்களின்படி, இவரது வயது 116 என குறிப்பிடப்பட்டிருந்தாலும் இவரது குடும்பத்தினர் இவருக்கு 127 வயது ஆகிறது என்று கூறி வந்தனர். இதனை சீன அரசாங்கமும் ஏற்றுக் கொண்டதால் உலகின் வயது முதிர்ந்த பெண்மணியாக "லுவோ மெய்ழென்" பெயர் இடம் பெற்றிருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top