புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணத்தில் தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


யாழ். முனியப்பர் வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபரொருவர், தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, குறித்த நபரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

துஸ்பிரயோகத்திற்குட்பட்டதாக கூறப்படும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரிசோதனையின் பின்னர் குறித்த நபரை குருநகர் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top