புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினால் நயினாதீவு அம்மனுக்கு நடத்தப்படும் நவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளச் சென்ற மாணவன் ஒருவர் விபத்தில் சிக்கி  உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.



இவ் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் திருநெல்வேலி முடமாவடியைச் சேர்ந்த நல்லைநாதன் தனுஷன் (வயது-14) என்ற மாணவனே உயிரிழந்தவராவர்.


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி தின இரண்டாம் நாள் பூஜை மேற்கொள்வது வழக்கம்.


இதற்கென சுமார் 75 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் அதிபருமாக தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அங்கு சென்றுள்ளனர். 


பூஜை நிகழ்வுகள் முடிந்த பின்பு பிற்பகல் 2 மணியளவில் நயினாதீவிலிருந்து குறிகாட்டுவானுக்குத் திரும்பியுள்ளனர்.


இந் நிலையில் அங்கிருந்து வாகனம் புறப்படத் தயாரான போது சில மாணவர்கள் ஏறியுள்ளனர். அதன் போது பிரஸ்தாப மாணவன் ஏறும்போதும் கால் தடக்கிக் கீழே விழுந்ததால் வாகனச் சில்லு அவரின் தலையில் ஏறி அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.


இச் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


பொலிஸார் சாரதியைக் கைது செய்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top