புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையைச் சேர்ந்த 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அந்த மாணவி மயக்கமடையும் வரை தனது பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் சுழிபுரம் பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

யாழ். வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே குறித்த இருவரும் கல்வி கற்று வருகின்றனர். சம்பவ தினமான 3ஆம் திகதி குறித்த மாணவி பாடசாலை விட்டு வீடு திரும்பி தனியாக இருந்த வேளையிலேயே மாணவன் அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

மாணவி சத்தமிட்ட போதும் மாணவன் வாயினுள் துணியைத் திணித்துவிட்டு அந்த மாணவி மயக்கமடையும் வரையும் பாலியல் வல்லுறவுக்கு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மாணவன் வட்டுக் கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவனிடம் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top