புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கடந்த சட்டமன்ற தேர்தலில் வடிவேல் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஆனபிறகு படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். வடிவேலு மீண்டும் நடிப்பாரா? என சினிமா ரசிகர்களின் மனதில் தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வடிவேலு ஆரம்பித்துவிட்டார் எனவும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் பரவி வந்தது.

இதுகுறித்து சுந்தர் சி கூறுகையில், தான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக வெளிவந்த செய்திகள் தவறானவை என மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு வெளியான செய்திகள் அனைத்துமே வதந்தி எனவும் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top