புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனிதனுக்கு தேவையான ஆரோக்கியத்தையும், புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.கீரையை அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது. எந்த கீரையை சமைப்பதாக இருந்தாலும், அவற்றைக் கழுவி சுத்தம் செய்த பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து சாப்பிடலாம்.
முருங்கை கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் அந்த நேரத்தில் சாப்பிட்டால், ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்.
முருங்கைக் கீரை உண்பதால் தாதுபலம் பெருகுவதுடன் இரத்த அழுத்தமும் குணமாகும்.
மேலும் இந்த கீரையை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்து குறைவதுடன் நீரிழிவு நோயும் குணமாகிறது.
முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால் மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
முருங்கைக்கீரை வடை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/2 கப்
ஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைக்கவும்.
* அதனுடன் முருங்கை இலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
* மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.
* பின்பு எள்ளையும் கலந்து நன்கு பிசையவும்.
* வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய்விட்டு முறுகலாக வேகவிட்டு எடுக்கவும்.
* இது இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top