புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குழந்தை பராமரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. குழந்தையை பராமரிப்பது ஒரு கலை என்று தான் சொல்ல வேண்டும். குழந்தைக்கு வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக
சாப்பிடச் செய்தால் வயிற்று பூச்சி எளிதில் இறந்து விடும்.

சில குழந்தைகள் இனிப்பு வகைகள் விரும்பி அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய பாட்டி வைத்தியம் ஒன்று உள்ளது. தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
வெளியேறும்.

கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்க வைக்கவும், துளசி இலையை தினம் ஒரு சில இலைகளை தினமும் மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் வெளியேறிவிடும். இது கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்
வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ இதை கொடுக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்தால் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.

குழந்தைகளுக்கு பூச்சி தொல்லை வந்தால் உடனே சரி செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள் விளையாடவும் செய்வார்கள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top