புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடத்தையில் சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட மனைவியை தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் ஆட்டோ டிரைவர். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.


ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காளீஸ்வரன். இவரது மனைவி புஷ்பவல்லி. 28 வயதான புஷ்பவல்லிக்கு காளீஸ்வரனின் நடத்தை குறித்து சந்தேகம் வந்துள்ளது. வேறு எந்தப் பெண்ணுடனாவது தொடர்பு இருக்குமோ என்று அவருக்கு கவலை வந்துள்ளது.

இதனால் அடிக்கடி அவருடன் சண்டை பிடித்து வந்தார். அவரது தொடர் கேள்விகளாலும், அடிக்கடி சண்டை பிடித்ததாலும் பெரும் கோபமடைந்தார் காளீஸ்வரன்.

இந்த நிலையில் வழக்கம் போல சம்பவ தினத்தன்றும் மோதல் மூண்டது. அப்போது வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மனைவி தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் புஷ்பவல்லி பரிதாபமாக இறந்து போனார்.

தனது மகளை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மருமகன் காளீஸ்வரன் குறித்துப் போலீஸில் புகார் கொடுத்தார் புஷ்பவல்லியின் தந்தை. இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் காளீஸ்வரனைத் தேடி வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top