புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பேராதனை இயற்கைத் தாவரப் பூங்காவில் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் நான்கு காதல் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர் பெரியோர் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்
என சகல தரப்பினரும் மேற்படி பூங்காவின் இயற்கை வளத்துறையைப் பார்வையிட வருகை தருகின்ற நிலையில் இவ்வாறு காதல் ஜோடிகள் மோசமாகவும் ஆபாசமாகவும் பூங்காவிற்குள் நடந்து கொள்வதற்கு இடமளிக்க முடியாது என பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர். பேராதனைப் பூங்காவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வந்திருப்பதாகவும் இதனை சோதிப்பதற்கென திடீர் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட போதே இந்த நான்கு காதல் ஜோடிகள் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மாவனல்லை, கம்பளை, தலவாக்கலை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காதல் ஜோடிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ___

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top