புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் மாவ்டி கிராமத்தில் சுவாமி நாராயண் குருகுலம் உள்ளது. இந்த குருகுலத்தை ஆனந்த் சுவரூப தாஸ் என்ற 32 வயது துறவி நடத்தி வந்தார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, குருகுலத்தில் பூட்டிய அறைக்குள் ஆனந்த் சுவரூப தாஸ் ஒரு பெண்ணுடன் இருப்பதாக போலீசுக்கு புகார் சென்றது.

போலீசார் உடனடியாக சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் பூட்டிய அறைக்குள் இருந்த துறவி யையும், இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு பிடித்துச்சென்றனர். அங்கே கூடிய பொதுமக்களும், மாணவர்களும் அவர்களை சரமாரி தாக்கினர்.

துறவியுடன் சிக்கிய இளம்பெண், விசவடார் என்ற இடத்தில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் வேலை செய்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.

துறவியுடன், இளம் பெண் சிக்கிய விவகாரம் ராஜ்கோட் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top