ஏழு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அம்பலாங்கொடை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கிடைக்கப்பெற்ற தகவலொன்றை விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.30 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக