புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வீசா காலாவதியான பின்னதாக சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவில் தங்கியிருந்த 30 வயதான இலங்கையைச் சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் இரவு வேளையில் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் புகலிடம்
கோருவதற்காக அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 68 வயதான பிரித்தானியப் பிரஜை ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அந்த பிரித்தானிய பிரஜையிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இலங்கையர் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன.

பிரிட்டனில் வேலை மற்றும் பிற நன்மைகளைப் பெற முயற்சிக்கும் ஒரு வழிமுறையாக யாரையாவது திருமணம் செய்து போலியான திருமண வாழ்க்கையை பதிவு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top