புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விழுப்புரம் மாவட்டம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பார்கவி. கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சி இந்தியாவில் "மகள் என்றும் பாராமல் உல்லாசத்திற்கு அழைத்தவர் எனது தந்தை" முருகனின் மகள் பேட்டி (காணொளி)ஒன்றில் கலந்து கொண்ட பார்கவி
தனது தந்தையின் மோசமான செயல்பாடுகள் குறித்தும், 3 பேரை கொலை
செய்துள்ளது பற்றியும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

'வேட்டையாடு விளையாடு' சினிமா பாணியில் 3 பேரை கொலை செய்து புதைத்த கொலையாளி முருகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் சோபா செய்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். என்னிடம் நல்லான்பிள்ளை பெற்றால் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சோபாக்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தொழில் முறையில் நாங்கள் 2 பேரும் நல்ல நண்பர்கள்.

நான் அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவரது மகள் லாவண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. லாவண்யாவை செக்சியாக வர்ணிப்பேன். அவருக்கு அது ரொம்ப பிடிக்கும். எங்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டது.

லாவண்யா வீட்டில் தனியாக இருக்கும்போது அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன். ஒருநாள் எங்கள் விவகாரம் சேகருக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட்டது. இதனால் அவரது வீட்டிற்கு செல்வதை குறைத்துக் கொண்டேன்.

இந்த நிலையில் சேகரிடம் சோபா விற்கும் வேலை பார்த்த சிலம்பரசன் என்ற வாலிபர் லாவண்யாவை காதல் வலையில் வீழ்த்தினார். சிலம்பரசன் - லாவண்யா காதல் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் சேகர் ஆத்திரமடைந்தார்.

தன்னிடம் வேலை பார்ப்பவனுக்கு பெண்ணை கொடுப்பதா? என்று கோபப்பட்ட அவர் லாவண்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். இதற்கிடையே சிலம்பரசனும் - லாவண்யாவும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். அடைக்கலம் தேடி எனது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு லாவண்யாவை பார்த்ததும் அவள் மீது ஆசை அதிகரித்தது. அடைக்கலம் கொடுப்பது போல் நாமும் அனுபவிக்கலாம் என்ற திட்டத்துடன் காதல் ஜோடிக்கு தஞ்சம் கொடுத்தேன். சிலம்பரசன் வெளியே செல்லும் நேரத்தில் லாவண்யாவுடன் உல்லாசம் அனுபவித்தேன். இது எனது மனைவி, மகளுக்கு தெரியவந்தது. காதல் ஜோடி 3 மாதம் என் வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் காதல் ஜோடியை தேடி சேகர் வந்தார். என்னிடம் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு தகராறு செய்தார். அன்று இரவு அவரை சமாதானப்படுத்தி மது விருந்து வைத்தேன். நான், சேகர், சிலம்பரசன் ஆகியோர் சேர்ந்து குடித்தோம்.

ஏற்கனவே திட்டமிட்டபடி சிலம்பரசன் வாங்கிவந்த விஷத்தை மதுவில் கலந்து சேகருக்கு கொடுத்து கொன்றோம். அவரது உடலை வீட்டில் உள்ள கிணற்றில் வீசி புதைத்து விட்டோம்.

இருதினங்கள் கழித்து சேகரை தீர்த்துக்கட்டிய விவகாரம் லாவண்யாவுக்கு தெரியவந்தது. என்னுடைய அப்பாவை அநியாயமாக கொன்றுவிட்டீர்களே, போலீசில் சொல்வேன் என்று மிரட்டினாள். அன்று இரவு மீண்டும் மது விருந்து நடந்தது.

நானும், சிலம்பரசனும், மது அருந்திவிட்டு லாவண்யாவுடன் இருந்தோம். அவருக்கு மது ஊற்றி கொடுத்தோம். அவர் போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும்போது ஷோபா கவர் கட்ட பயன்படும் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் அவர் உடலையும் கிணற்றுக்குள் புதைத்தோம். 2 கொலைகள் பற்றியும் போலீசில் சொல்லிவிடுவேன் என்று கூறி சிலம்பரசன் என்னிடம் பணம் பறிக்க தொடங்கினான்.

இதுபற்றி எனது மனைவியிடம் தெரிவித்தேன். சிலம்பரசன் உயிரோடு இருந்தால் நம்மை காட்டிகொடுத்து விடுவான். எனவே அவனை தீர்த்துகட்டுவது என்று முடிவு செய்தோம். அதன்படி நானும் எனது மனைவி ராஜேஸ்வரியும் சேர்ந்து சிலம்பரசனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றோம். சிலம்பரசனின் உடலை மட்டும் குடிநீர் குழாய் அருகில் தனியாக புதைத்தோம்.

இது எனது மகள் பார்கவிக்கு தெரிந்துவிட்டது. எனவே நான் அவளை கண்காணிக்க தொடங்கினேன். அப்போது பார்கவி எனது மகள் என்பதையும் மீறி செக்ஸ் ஆசை ஏற்பட்டது. பலமுறை அவளிடம் தவறாக நடக்க முயன்றேன். அவள் தப்பி விட்டார். இதற்கிடையே அவர் சதீஷ் என்ற வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதையடுத்து எப்படியாவது பார்கவியை செக்சுக்கு பணியவைக்க முயன்றேன், முடியவில்லை.

அவர் டி.வி. நிகழ்ச்சியில் எல்லா ரகசியத்தையும் புட்டு வைத்து விட்டார். செக்ஸ் வெறியால் நண்பரையும், காதல் ஜோடியையும் அடுத்தடுத்து கொலை செய்யும் நிலைக்கு ஆளானேன். காமம் கண்ணை மறைத்து மகளிடமே சில்மிஷத்தை தொடங்கியதால் அவர் மூலம் போலீசில் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே அவரது மனைவி ராஜேஸ்வரி சற்று முரண்பாடாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் முருகனும், சேகரும் நண்பர்கள். கடந்த டிசம்பர் 2008ம் ஆண்டு சேகரின் மகள் லாவண்யா, சிலம்பரசன் என்ற வாலிபரை வீட்டை விட்டு ஓடி காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் வீட்டில் இருந்து ஏராளமான நகை பணத்தை எடுத்து வந்திருந்தார். அடைக்கலம் தேடி எங்கள் வீட்டிற்கு வந்தனர். இங்கு 3 மாதம் தங்கியிருந்தனர்.

அப்போது எனது கணவர் லாவண்யா, சிலம்பரசன் ஆகியோருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் வீட்டிற்கு முன்பு உள்ள கிணற்றில் புதைத்தார்.

காதல் ஜோடி தங்கியிருந்த தகவல் அறிந்து லாவண்யாவின் தந்தை சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரையும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து எனது கணவர் கொலை செய்தார். அவரது உடலை வீட்டில் உள்ள குடிநீர் குழாய் அருகில் புதைத்தார். இதுபற்றி வெளியில் சொன்னால் எங்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனால் இந்த சம்பவம் குறித்து நாங்கள் வாய் திறக்கவில்லை.


மேலும் கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை எடுத்து உல்லாசமாக செலவழித்தார். சில தினங்கள் கழித்து லாவண்யா, சிலம்பரசன், சேகர் ஆகியோரை காணாமல் அவர்களது குடும்பத்தார் எங்கள் வீட்டிற்கு தேடி வந்தனர். அப்போது அவர்கள் உறவினர்களிடம் லாவண்யாவையும், சிலம்பரசனையும் அழைத்துக்கொண்டு சேகர் சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடினார். அதை அவர்கள் அப்படியே நம்பிவிட்டனர்.

இப்போது எனது மகள் பார்கவியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அவளது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாலும் அவள் இந்த ரகசியத்தை டி.வி. நிகழ்ச்சியில் போட்டு உடைத்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் கொலையாளிகள் முருகன், ராஜேஸ்வரி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top