புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பணிப்புலத்தில்  பிறந்து, காலையடியிலும், இறுதிக் காலத்தில்  கனடா - ஸ்காபறோ நகரில் வாழ்ந்தவரும்; இலங்கை போக்குவரத்து சபை
சுபிறீம்டென்ரன்(suprintendant)  ஆக சேவையாற்றியவருமான,வைத்திலிங்கம் சிவஞானம் அவர்கள் 01.09.2012 சனிக்கிழமையன்று கனடா டொரண்டோ நகரில் உள்ள தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார். 

அன்னார், அமரர்களான வைத்திலிங்கம் அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்;அமரர்களான இராமலிங்க்கம்-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்;தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்;மார்க்கண்டு(அமரர்), வரதராஜா(அமரர்), நாகரத்தினம்(கொழும்பு), இராமச்சந்திரன்(அமரர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரஞ்சனி (சுவிட்சர்லாந்து), சிவமோகன்(கனடா), சிவச்சந்திரன்(கனடா), சிவகுமாரி(டென்மார்க்), சிவச்செல்வன் (நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்;  

சிவசுப்ரமணியம்(அமரர்) , இந்திரகுமார்(அமரர்), தவமணி(அம்மன்), சத்தியபாமா(சிவமலர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்;நிருத்திகா, நீருஜா, கோபிகா, நிதர்சன், ராவிஷன், சாம்பவி, விசிஷன், நிவீஷா, ரிஷீபன் ஆகியோரின் பாசமிகு பேரனாருமாவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத் தரப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர:  001-416-269-2560

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top