புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கணவனின் சகோதரருடனான கள்ளக்காதல் அம்பலமானதால் கூலிப்படையுடன் சேர்ந்து கணவன‌ை கொலை செய்து 11 துண்டுகளாக வெட்டிய மனைவியை பொலிசார் கைது
செய்தனர்.

மும்பையின் டிட்வாலா பகுதியில் உள்ள கோயில் அருகே கடந்த டிசம்பர் 12-ம் திகதி அனாதையாக ஒரு சாக்குப்பை கிடந்தது. போலீசார் சோதனை நடத்திய போது ஆண் சடலம் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி பொலிஸ் ஸ்டேசனில் ஏற்கனவே ஆண் ஒருவர் ஒரு காணாமல் போனதாக பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆண் சடலத்தை அடையாளம் காட்டியதில் கொலையானவர் மெகதார் (31) எனவும், பால் வியாபாரி எனவும் தெரியவந்தது.

தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் மெகதார், அவரது இரண்டாவது மனைவி ஆதித்யா (29) ஆகியோர் டிட்வாலாவில் வசித்து வந்தனர். ஆதித்யாவிற்கும் மெகதாரின் மூத்த சகோதரர் பர்வேஷூக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்த விவகாரம் ‌கணவர் மெகதாருக்கு தெரியவரவே. ஆதித்யா, கள்ளக்காதலன் பர்வேஷ் மற்றும் கூலிப்படையினர் மெகதாரை திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக ஆதித்யாவை பொலிசார் கைது செய்து விசாரித்தனர். டிட்வாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர நாயக் கூறுகையில், மெகதாரை கயிறால் கழுத்தை இறுக்கியும், தலைய‌‌னையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை 11 துண்டுகளாக வெட்டி சாக்குப்பையில் கோயில் அருகே வீசியுள்ளனர். கொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top