புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் பாலாவின் நான் கடவுள் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க வைத்தது. மாநில விருது கிடைத்தது. அதன் பிறகு பூஜா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதே
தெரியாததால் வாய்ப்பு கொடுக்க நினைப்பவர்களும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியாக கிடைத்த தகவல் படி அவர் பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும். அந்த நிறுவனத்தின் அதிபர் மகனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். பூஜா இலங்கையை சேர்ந்தவர். அப்பா சிங்களர், அம்மா தமிழர். தற்போது அவர் சிங்களப் படத்தில் நடித்து வருவதாகவும், சிங்களர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இலங்கையிலேயே செட்டிலாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை, எது வதந்தி என்பதை பூஜா சொன்னால்தான் தெரியும்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top