புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



சுவீடனில் பயணிகள் ரயிலை திருடிச் சென்று விபத்தை ஏற்படுத்திய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடான சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நக்லிங்கே ரயில் நிலையத்தில், 4 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது.

அப்போது 24 வயதுடைய துப்புரவு பெண் ஒருவர் ரயிலை திருடி என்ஜினை இயக்கி அங்கிருந்து ஓட்டிச்சென்றார். சுமார் 80 கி.மீ.வேகத்தில் சென்ற ரயிலை நிறுத்த முடியாமல் திணறினார்.

அந்த ரயில் திடீரென தண்டவாளத்தினை விட்டு தடம்புரண்டது. சுதாரித்த அந்த பெண் ரயிலில் இருந்து குதித்து தப்பினார். பின்னர் ஒன்றரை கி.மீ. தூரம் தானாக சென்ற ரயில் சாலையில் பனி படந்த இடத்தில் சிறிது தூரம் சென்று வழியில் மூன்று மாடி கொண்ட ஒரு வீட்டிற்குள் புகுந்த நின்றது.

அதிர்ஷ்டவசமாக வீ்ட்டில் உள்ளவர்கள் மூன்றாவது தளத்தில் இருந்ததால் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. சம்பவம் அறிந்த பொலிசார் விரைந்து வந்து ரயிலை திருடிச்சென்று இயக்கி அந்த பெண்ணை கைது செய்தனர்.

ரயி‌லை இயக்க கூடிய சாவி அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது, தற்போது அப்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top