புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென்கொரியாவின், முதலாவது பெண் ஜனாதிபதியாக பார்க் கியூன் ஹே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தென்கொரியாவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடைபெற்றது. இதில், தென்கொரிய முன்னாள் பிரதமர் மூன் ஜேவை வீழ்த்தி, கியூன் ஹே தென்கொரிய நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை வசப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து அந்தநாட்டு ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் கியூன்ஹே பதவி ஏற்றார். பல இலட்சம் பேர் கூடியிருந்த விழாவில் அவர் பேசுகையில்...

நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டேன். வடகொரியா நடத்தியுள்ள அணுகுண்டு சோதனை தென்கொரியாவின் எதிர்காலத்துக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் விடுவிக்கப்பட்ட சவாலாக உள்ளது. இந்த சவாலுக்கு வடகொரியாவே இரையாகும் சூழ்நிலை உருவாகி விடும் என்று எச்சரித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top