புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய இரு இளைஞர்களை இரத்தினபுரி மாவட்டத்தின் பிபிலை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிபிலை நில்கலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கே நேற்று நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நில்கலை பகுதியின் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரான பெண் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து அச்சிறுமியை பிபிலை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்து இது குறித்து சிறுவர் பராமரிப்பு அதிகார சபைக்கும் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இரு இளைஞர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top