புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கில் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளது.

நீண்டகாலமாக காதலித்த தனது காதலி இந்தியாவிற்கு வழிபாட்டுத் தலத்துக்கு தனது குடும்பத்துடன் சென்று வருவதாக கூறியுள்ளார்.

இப் பெண் ஊருக்கு வரும்போது திருமணம் முடித்து புது மாப்பிள்ளையுடன் காரில் செல்வதைக் கண்டதால் இவர் தனது உயிரை மாய்த்துள்ளதாக உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் வர்த்தக பிரிவில் 3 ஆம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கா யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top