புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னிடம் படித்த மைனர் மாணவியுடன் செக்ஸ் உறவு கொண்ட இந்திய வம்சாவளி ஆசிரியருக்கு சிங்கப்பூரில் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றிய அரவிந்த் மேனன்(25) என்பவர் தன்னிடம் படித்த 14 வயது மாணவியுடன் நட்பாக பழகி, செக்ஸ் உறவு கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த மாணவி அரவிந்தை விட்டு விலக நினைத்துள்ளாள். இதனால் அவர் அந்த பெண்ணுடன் உறவு கொண்ட ஆபாச காட்சிகளை காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் மீது கடந்த 2009ம் ஆண்டு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தற்பொழுது இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவசண்முகம், மாணவியுடன் உறவு கொண்ட காட்சிகளை காணொளி எடுத்து மிரட்டிய குற்றத்துக்காக அரவிந்த்க்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.

அரவிந்த் மீது மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top