புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது.

புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஐ.பி.பி.ஒய்., (இளைஞர்களுக்கான உலக புத்தக அமைப்பு) இத்தினத்தை கடைபிடிக்கிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த அமைப்பு, தற்போது இந்தியா உள்ளிட்ட 72 நாடுகளில் செயல்படுகிறது.

குழந்தைகளின் அரசன் என போற்றப்படுபவர் டென்மார்க்கை சேர்ந்தவர் கவிஞர் எச்.சி. ஆண்டர்சன். இவர் 1805 ஏப்., 2ல் பிறந்தார். 14 வயதில் நடிகராக வேண்டும் என எண்ணினார்.

இவரது குரல் வளத்தை கேட்ட சக கலைஞர்கள், நீங்கள் ஏன் கவிதைகள் எழுதக்கூடாது என கேட்டனர். இதனை இலட்சியமாக எடுத்துக்கொண்ட ஆண்டர்சன் அதில் முழு ஈடுபாட்டை செலுத்தினார்.

பின் குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார்.

இவரது கதை புத்தகங்கள் 125 மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது கதைகளை தழுவி, அனிமேஷன் திரைப்படங்களும் வெளியாகின.

சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புத்தங்கள் எழுதுவதில் சிறந்து விளங்குபவர்களுக்கு, அச்சடிக்கும் பதிப்பகங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை "எச்.சி.ஆண்டர்சன் விருது´, ஐ.பி.பி.ஒய்., அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top