புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பானின் மியாகோ பகுதியிலிருந்து கிழக்கே 107 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடலுக்கடியில் நேற்று திடீரென்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நேரப்படி இரவு 12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கவில்லை.

மேலும் நிலநடுக்கத்தால் உயிர் இழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top