புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ராஜ வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் ரமேஷ் (30). தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.


பல இடத்தில் பெண் பார்த்தும் அமையவில்லை. இதனால் விரக்தியடைந்த ரமேஷ், திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ரமேஷ், வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தார்.

உடனடியாக அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ரமேஷ் இறந்தார்.

இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top