புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மகசென்புர என்கிற கிராமத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகின்ற பெண்
ஒருவரை பொலிஸார் கைது செய்து உள்ளனர்.

ஜா-எல பகுதியில் வைத்தே இப்பெண்ணை சந்தேகத்தில் பிடித்து உள்ளனர்.

எச்.எம். சூரியபண்டார (வயது 38), ஜீவனி அனுரதிக்கா (வயது 36) தம்பதி நேற்று நள்ளிரவு கொலை செய்யப்பட்டது.

இருவரும் கோடரியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அவ்வீட்டில்  தங்கியிருந்த உறவுக்கார பெண்ணே இருவரையும் கொலை செய்துள்ளார் என்று  தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இரட்டைக் கொலை இடம்பெற்றபோது வீட்டில்தான் இருந்து உள்ளார்.பின்  கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளான  நிமாலி பிரியதர்சினி (வயது 15)  செவ்வந்தி பிரியதர்சினி ஆகியோரை கூடவே  அழைத்துக் கொண்டு  இன்று அதிகாலை   ஜாஎல பிதேசத்துக்கு சென்று உள்ளார் .

வீட்டின் வெளியே சூரியபண்டாரவின் சடலம் காணப்பட்டது. இதை கண்ட அயலவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலயத்திற்கு கொடுத்த தகவலை அடுத்து கொலை பற்றிய விபரங்கள் வெளியாகியன.

பொலிஸரின் தீவிர விசாரனையை அடுத்து கொலைச் சந்தேக நபரும், அவருடன் சென்ற இரு பெண் பிள்ளைகளும், பிடிக்கப்பட்டனர்.
புல்மோட்டையில் கள்ளக் காதலர்களை வெட்டிக் கொலை செய்த பெண்

கொலைச் சந்தேகநபரான  இளம்பெண்ணுக்கும்  கொல்லப்பட்டவர்களின் மூத்த மகளுக்கும் இடையே ஒருபால் உறவு இருந்ததாகவும் அதனை கண்டித்தமையை அடுத்தே கொலை இடம்பெற்றதாகவும்  ஆரம்ப பொலிஸ்  விசாரைகள்ணை மூலம் அறிய வந்து உள்ளது.திருகோணமலை இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top