புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் வாமணன், இங்கிலிஷ் விங்கிலிஷ், 180 உட்பட படங்களில் சில நடித்திருப்பவர் பிரியா ஆனந்த்.
தற்போது எதிர்நீச்சல் படத்தில் நடித்துள்ள பிரியாவுக்கு முத்தக்காட்சிகளில் நடிப்பதில் தயக்கம் ஏதும் இல்லையாம்.


இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவில் பெற்றோருடன் இருந்தபோதே நிறைய சினிமா பார்ப்பேன்.

சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தேன். இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களை பார்ப்பேன்.

ஒவ்வொரு படத்திலும் ஒரே மெசேஜ் சொல்வார். அவரிடம் உதவி இயக்குனராக சேர விரும்பினேன். இந்நிலையில் மொடலிங் செய்யும் வாய்ப்பு வந்தது.

அதைத்தொடர்ந்து நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஒரு முறை ஷங்கரை பார்த்தபோது என் விருப்பத்தை கூறினேன். அவர் பலமாக சிரித்தார். தற்போது நடிகையாக எனது திரையுலக வாழ்க்கையை தொடர்கிறேன்.

சினிமாவில் எனக்கு பின்புலம் யாரும் கிடையாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்புகிறேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள்.

ஏற்கனவே '180', 'கோ அன்ட்டே கோட்டி' படங்களில் நாயகனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்திருக்கிறேன். நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.

ஆனால் இந்த காட்சிகளில் ஆபாசமாக நடித்ததாக யாரும் என் மீது குற்றம் சொல்லவில்லை என்றும் காட்சிக்கு தேவையென்றால் முத்தம் கொடுத்தும், நெருக்கமாகவும் நடிக்க தயங்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top