புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிறுவனொருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் திருமணமாகாத 36 வயது பெண்ணொருவரையும் 74 வயது நபரொருவரையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விஷேட பொலிஸ் குழுவினர் கடந்த 9ஆம் திகதி கைதுசெய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 11 வயது சிறுவன் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றான். பாடசாலையில் காவலாளியான 74 வயது நபரே சிறுவனை ஏமாற்றி அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெற்றோர் இது குறித்து பாதுக்க பொலிஸ் நிலையத்த்pல் முறைப்பாடு செய்ய சென்றபொது முறைப்பாட்டை ஏற்க பாதுக்க பொலிஸார் மறுத்ததால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர் இதையடுத்து விஷேட பொலிஸ் குழுவினர் 74 வயது பாடசாலை காவலாளியைக் கைது செய்தள்ளனர். பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் 36 வயது பெண்ணொருவரும் இச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து அப்பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பெண் சிறுவனை ஏமாற்றி தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது சாந்தை இணையம்
 
Top