புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நான்கு வயது சிறுவனொருவனை தனது பாலியல் திருப்திக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 59 வயது பெண்ணொருவர் மீது கம்பஹா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட பெண் தான் நிரபராதி என நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து அவரை 30,000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்லும்படி நீதியரசர் பியசீலி விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரும் ஞாயிற்றுக்கிழமை நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கைச்சாத்திட வேண்டுமெனவும் நீதியரசர் உத்தரவிட்டார்.

2004.5.01 திகதி மற்றும் 2004.5.14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த சிறுவனை தனது பாலியல் திருப்திக்காக பயன்படுத்திக் கொண்டதாக ஊராபொலயைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
Top