புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

thumbnail
ஐ.பி.எல். கிரிக்கெட் 60வது லீக் போட்டி ராஞ்சியில் இன்று மாலை தொடங்கியது. இதில் பெங்களூர்-கொல்கத்தா அணிகள் மோதின.


டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து பெங்களூர் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.

பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக புஜாரா மற்றும் கெய்ல் களம் இறங்கினார்கள். புஜாரா 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து கெய்ல் உடன் ஜோடி சேர கோலி களம் இறங்கினார்.

இருவரும் நிதானமாக விளையாட தொடங்கினர். கோலி 17 ரன்னில் கல்லிஸ் பந்தில் போல்ட் ஆனார்.

அடுத்து டி வில்லர்ஸ் களம் இறங்கினார். கெய்ல் 33 ரன்னிலும் வில்லர்ஸ் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூர் அணி திணறியது.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா தரப்பில் நரைன் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிஸ்லா ஆட்டத்தின் 2 வது பந்தில் அவுட் ஆனார். அவருடன் களம் இறங்கிய கம்பீர் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கல்லீஸ் மற்றும் பதான் நிதானமாக விளையாடினார்கள். பதான் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்து கல்லீஸ் உடன் ஜோடி சேர திவாரி களம் இறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த கல்லீஸ் 41 ரன்னில் ஆட்டம் இழந்தார். திவாரி 24 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் கொல்கத்தா அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top