அமெரிக்காவின் ஒஹியோ மாநிலதில் காணாமல் போயிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் குழந்தைக்கு அவரை சிறை வைத்திருந்த ஏரியல் காஷ்ரோவே தந்தை என
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒரு தசாப்தமாக மூன்று பெண்களை சிறை வைத்தாக ஏரியல் காஷ்ரோ மீது குற்றம் சுமத்தப்படுள்ளது.
அத்துடன் அவர்களை கடத்தியதாகவும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படுள்ளன.
இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் ஆறு வயது குழந்தைக்கு ஏரியல் காஸ்ரோவே தந்தை என டீ.என்.ஏ பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
சிறை வைத்திருந்த பெண்களை கட்டாய கருச்சிதைவுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கொலைக் குற்றச்சாட்டினை பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒஹியோ மாநில சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக