புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி மனநலம் குன்றிய பெண்ணொருவரால் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை மீது இளைஞர் குழுவொன்று நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மரணித்த பிள்ளைகளின்; தாயார் வவுனியா பொது மருத்துவமனையில் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்கு தாண்டிக்குளத்தில் உள்ள அவர்களது வீட்டில் இடம்பெற்றது.

இந்த நிலையில், பிள்ளைகள் இறப்பதற்கு வறுமையும் தந்தை வேறு ஓர் பெண்ணை திருமணம் செய்து சென்ற நிலையில், குடும்பத்தினரை ஆதரிக்காமையுமே காரணமெனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்றைய தினம் இந்த மூன்று பிள்ளைகளின் இறுதிச்சடங்குகள் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயாத்தில் இடம்பெற்றதன் பின்னர் இளைஞர் குழுவொன்று பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது அவர்கள் ஆக்ரோசமாக காணப்பட்டதுடன் பிள்ளைகளின் இறப்புக்கு தந்தையான விஜயகுமாரவே காரணமெனவும் தெரிவித்திருந்தனர்.

 
Top