புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புற்று நோயை உண்டாக்கக் கூடிய "ரகசிய உயிர்க் கொல்லி" என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு முகத்துக்கு பூசும் வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன்
நிரூபித்துள்ளனர்.
இந்த ஆய்வானது 8 ஆயிரத்து 525 பெண்களிடம் நடத்தப்பட்ட போது முகப் பவுடரை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் குளியலுக்கு பின்னர் நறுமணத்திற்காக உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வதோடு பிறப்புறுப்பில் பவுடர் போட்டுக் கொள்வது போன்ற பழக்கத்தினால் கருப்பை புற்று நோய் தாக்கும் அபாயம் 24 சதவீதம் அதிகம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிரிகாம் மற்றும் பாஸ்டன் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் 8 வகையிலான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அதன் பின்பே இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top